அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?

Image result for searching in quran
மனிதனுக்கு உள்ள மகத்தான ஆற்றல்தான் அவனது சிந்தனா சக்தி ஆகும். கேள்வி, பார்வை போன்ற புலன்கள் மனிதனின் சிந்தனை சக்தியின் கூர்மைக்கு வலுச்சேர்க்கின்றன. இஸ்லாம் நமக்கு அறிமுகம் செய்துதரும் எல்லாம் வல்ல ஏக இறைவனாம் அல்லாஹ்விடமிருந்து மனித சமூகத்திற்கு வழிகாட்டுவதற்காக வழங்கப்பட்ட, பிழைகள் தவறுகள் முரண்பாடுகள் அற்ற மிக உன்னதமான வழிகாட்டல் தொகுப்பே குர்ஆன் என்பது இஸ்லாமிய நம்பிக்கை ஆகும்.  اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏ என்று குர்ஆனின் 47 ஆவது அத்தியாயமான ‘முஹம்மது‘ உடைய 24 ஆவது வசனம் அமைந்துள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்ட இறுதித் தூதர் முஹம்மதுவின் பெயரிலேயே அமைந்துள்ள அந்த அத்தியாத்தின் (சூராவின்) 24 ஆவது வசனத்தின் மொழிபெயர்ப்பாக “அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?” என்பது அமைந்திருக்கின்றது.

படைத்த எல்லாம் வல்ல இறைவனே குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்று ஆசையாகக் கேட்கும் பொழுது, இறைவனின் இறுதி வேதம் என்று சொல்லப்படும் இஸ்லாத்தையே ஆராய்ந்து பார்ப்பதில் இறைவனுக்கு எந்த பிரச்சினைகளும். ஆட்சேபனைகளும் இருக்கப் போவதில்லை என்கின்ற நம்பிக்கையுடன், இஸ்லாத்தை ஆராய்ந்து பார்க்கும் பணிக்கு இந்த இணையம் அர்ப்பணம் செய்யப்படுகின்றது.

#இஸ்லாத்தை_சிந்திப்போம் 01

Leave a comment